சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் 24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 4 மணிமுதல் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தொழில்முனைவோருக்கான பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி