உள்நாடு

ஒட்சிசன் தேவையுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – மருத்துவ ஒட்சிசன் வாயு தேவையேற்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பார்த்ததை போன்று கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ ஒட்சிசன் வாயு தேவையேற்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் குறைவடைந்துள்ளது.

எந்தவொரு நோயாளர்களும் மருத்துவ ஒட்சிசன் வாயு கிடைக்கப்பெறாமல் அசௌகரியத்திற்கு முகங்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு இடமளிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் : சந்தேக நபர் பலி

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!

நல்லடக்கமா எரிப்பா பிரச்சினையின் போது ரணிலும், அநுரவும் கோட்டாபயவுக்கு பயந்து மெளனம் காத்தனர் – முஸ்லிம் மக்களுக்காக அன்று நாம் வீதிக்கிரங்கினோம் – சஜித்

editor