உள்நாடு

ஏப்ரல் 3ம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

பெங்கிரிவத்தையில் போராட்டம் வெடித்ததை அடுத்து பொலிஸார் நேற்று (31) இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 1010 பேர் தனிமைப்படுத்தலுக்கு

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor

ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் மீட்பு