எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல பாறை பகுதியில் ஏற்பட்ட தீ, தற்போது எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயத்தில் உள்ளது.
தற்போது, பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலானது எல்ல-வெல்லவாய பிரதான வீதிக்கு நெருங்குவதைக் கட்டுப்படுத்துவதற்காக, பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களின் உதவியைப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.