உள்நாடு

எலி காய்ச்சல் நோய் என சந்தேகம் – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழில் எலிக்காய்சல் நோய் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டது.

Related posts

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

இலங்கையின் நிலை குறித்து கிரிஸ்டலினா ஜோர்ஜீவா கவலை

காஸாவில் போர் நிறுத்தம் – இலங்கை பாராட்டு

editor