உள்நாடு

எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தல்!

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான உத்தேச விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து சபாநாகரிடம் வலியுறுத்தியுள்ளன. மேலும், இந்த கொடூரமான சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளையும் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

இதற்கு முன்னரும், இச்சட்டமூலத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் அமைய மீள் வரைவு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பிரகாரம், இன்று பாராளுமன்றத்தில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த சட்ட மூலத்தை இப்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

பங்களாதேஷ் கடற்படை போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

editor

விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்!