சூடான செய்திகள் 1

எட்டு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்ற தீர்மானம்

(UTV|COLOMBO) – மாகாண சபைகளின் கீழ் இயங்கி வரும் எட்டு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள திம்புலாகல-விலயாய மத்திய மகா வித்தியாலயம், தோபாவெவ மகா வித்தியாலயம், திவுலங்கடவல மத்திய மகா வித்தியாலயம், பகமூன மஹாசென் மகா வித்தியாலயம், பொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை-உஹன மகா வித்தியாலயம் மேலும் கம்பஹா ஹேனேகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் குளியாபிடிய சாராநாத் வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தேசிய பாடசாலையாக மாற்றம் பெறவுள்ளன.

மேற்படி பாடசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பதில் உடன்படாத கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இருப்பார்களாயின், குறித்த நபர்கள் மூன்று வருட சேவைக் காலத்திற்கு பிறகு மாகாண பொது சேவைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்

நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி