உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 04 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 75 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 99 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 781 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
அதனடிப்படையில் இதுவரையான 880 முறைப்பாடுகளில் 766 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 114 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.