அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 13 வேட்பாளர்கள் கைது

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.

அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

நேற்று (08) காலை 6.00 மணி முதல் இன்று (06) காலை 6.00 மணி வரை தேர்தல் தொடர்பான குற்ற முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொழும்பு தவிர்ந்த ஐந்து மாவட்டங்கள் முடக்கம்

VAT வரி சட்டமூலத்தில் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்த தீர்மானம்