அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறுதல் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக நேற்று (23) நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்த தகவல் அறிக்கையை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று தேர்தல் தொடர்பான எந்த குற்ற முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்றும், ஆனால் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பதிவான முறைப்பாடுகள் பின்வருமாறு:

1) மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை – தம்புள்ளை வீதியில் அலுவிஹாரயிலிருந்து பலபத்வல சந்தி வரையிலான வீதிகளில் வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2) மாத்தளை – ரத்தோட்டை பொலிஸ் பிரிவில் மாத்தளை-ரத்தோட்டை வீதியில் கைகாவல முதல் ரத்தோட்டை வரையிலான பகுதியில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் கொடிகள் காட்சிப்படுத்தப்படுள்ளமை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

3) மாத்தளை – ரத்தோட்டை பொலிஸ் பிரிவில் வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4) கெப்பத்திகொல்லாவ – மதவாச்சி பொலிஸ் பிரிவில் உலர் உணவு விநியோகம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

5) பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் வேட்பாளர் ஒருவர் பிரதான வீதியில் புதிய வீதி விளக்குகளை பொருத்துவது தொடர்பாக பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

6) மொனராகலை பொலிஸ் பிரிவின் விஹார மாவத்தை, மொனராகலை வீதியில் வேட்பாளர் ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாக முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் கோரிக்கை

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.