அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (11) காலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரிவாசம் மற்றும் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பசுமைப் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு நாடாக எம்மால் முன்னோக்கிப் பயணிக்கலாம்.

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு