உள்நாடு

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்

(UTV | கொழும்பு) – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர, இலங்கையில் பரவி வரும் கொவிட் வைரஸ் விகாரமானது நாட்டில் ஒரு மோசமான நிலைமையை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

BA5 எனப்படும் Omicron துணை வகை உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த சமீபத்திய மரபணு பகுப்பாய்வின்படி, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள எங்கள் நிறுவனம், இலங்கையில், குறிப்பாக கொழும்பைச் சுற்றி, BA5 எனப்படும் ஓமிக்ரான் துணை வகையைக் கண்டறிந்துள்ளது. இலங்கையில் முதன்முறையாக இதைக் கண்டுபிடித்தோம். உலகம் முழுவதும் கொவிட் -19 நோய் பரவுவதற்கான முக்கிய விகாரமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. கொவிட்-19 கண்டறியப்பட்ட பிறகு மிக வேகமாகப் பரவக்கூடிய வகை இதுவாகும். அதனால், வரும் காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதற்குத்தான் நாம் தயாராக வேண்டும்.”

Related posts

“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?

குருந்தூர்மலை வழக்கு – கைது செய்யப்பட்டவர்களளுக்கு பெப்ரவரி தவணை.

இயற்கையோடு இணைந்த விவசாயப் புரட்சி அவசியம்