சூடான செய்திகள் 1

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

(UTV|COLOMBO) அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  உறுதிமொழி மீறப்படுமானால் முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இச் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடன்கொட இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு முறைமையை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

 

 

Related posts

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது