உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான தேவாலயங்களில் மற்றும் இனங்காணப்பட்ட சில பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் உயிர்த்த ஞாயிறு வாரம் பூராவும் அமுலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

இவ்வாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றிய ஐ டி எம் என் சி சர்வதேச கல்விநிறுவனம்!

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!