சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவை நியமிப்பது குறித்த பிரேரணை சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலான பிரேரணை இன்று (22ஆம் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இன்றைய தினத்திலேயே வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெரிவுக்குழுவில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர்.

Related posts

பஸ் கட்டணங்கள் நேற்று(26) நள்ளிரவு முதல் குறைப்பு

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

IMF வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கோரிக்கை