சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி, ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில், தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினூடாக ஆயுதப் பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 4பேர் கைது