சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல்…

(UTV|COLOMBO)-5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளில் 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட உள்ளது.

572 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் 8 ஆயிரத்து 432 ஆசிரியர்கள் இந்த விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 37 பாடசாலைகள் மூடப்பட உள்ளதுடன், அந்த பாடசாலைகள், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

 

Related posts

03 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ சுதந்திரக் கட்சி ஆதரவு [VIDEO]

தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சில வீதிகளுக்கு பூட்டு