உள்நாடு

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவை மற்றும் சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று(04) மற்றும் நாளை (05) இவர்கள் குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதால் இன்று பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

அதேபோன்று, நாளை நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் பதவியேற்பு!

editor

தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு இன்றும் சந்தர்ப்பம்

தேர்தல் திகதிக்கு எதிரான மனு பரிசீலனை ஆரம்பம்