உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல்: பிரதிவாதி மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

(UTV | கொழும்பு) –   ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று(26) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் தற்போதைய ஜனாதிபதி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு அரசியலமைப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை அறிவித்துள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

நீர் கட்டண திருத்தம் – வர்த்தமானி வௌியானது

editor

அடுத்தவாரமும் பயணத் தடையை நீக்க முடியாத நிலைமை