வகைப்படுத்தப்படாத

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக் குழுக்களால், இஸ்ரேலை நோக்கி 460க்கும் அதிக ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்குப்பதிலாக, பலஸ்தீனின் 160 இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 7 பலஸ்தீன ஆயுததாரிகளும் ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இருதரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக எகிப்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக பலஸ்தீன ஆயுதக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Related posts

Thehan and Oneli bag U16 single titles

“Defence forces worked to prevent any more attacks” – Sec. Def. Shantha Kottegoda

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை