உள்நாடு

இலங்கை அணுசக்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

“அரசியல் புகலிடம் கோர, நாடகம் போடும் உத்திக்க”

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு