உள்நாடு

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 5 பேருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 946 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ரிஷாதின் கைதுக்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் தனி நபர் பிரேரணை

உயர்மட்ட சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி பேச்சு!

கொரோனா : தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு