உள்நாடு

இலங்கைப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்

(UTV|கொழும்பு) – இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கொரோனா வைரஸ் அறிகுறி தொடர்பாக இத்தாலியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

63 வயதான இலங்கை பெண், இத்தாலியில் நேபிள்ஸ் நகரத்திலுள்ள கோட்டுக்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் இத்தாலியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த செவ்வாயக்கிழமை இலங்கையில் இருந்து இத்தாலிக்குச் சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடுக்குநாறி சம்பவம்: கண்டுகொள்ளாத மனித உரிமைகள் அமைப்பு – அம்பிகாவின் தெளிவு

கொரோனாவை கட்டுப்படுத்த 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

editor