உள்நாடு

இலங்கைக்கும் – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இன்று (28) முதல் இடைநிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

கட்டுப்பாடற்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நிலைமை மீண்டு வந்தவுடன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என நம்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

கம்பஹா – திவுலப்பிட்டிய சம்பவம் – பெண் IDH வைத்தியசாலைக்கு

சமனல குளம் – காசல்ரீ அனல்மின் நிலைய மின் உற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும்