உள்நாடு

இறக்குமதி மருந்துகளை விடுவிக்க விசேட குழு!

(UTV | கொழும்பு) –

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் குறித்த குழு செயற்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹீபால குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பதிவு செய்வதற்கான கால எல்லையைக் கடந்துள்ள மருந்துகளுக்கான காலத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதி வரை நீடித்துள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் ஜனாதிபதியை சஜித் ஏன் சந்திக்கவில்லை? காரணம் வெளியானது

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்  முன்னெடுப்பு 

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ் – சபையில் மனோ