உள்நாடு

இராணுவ தளபதிப் பதவியில் இருந்து ஷவேந்திர விடைபெறுகிறார்

(UTV | கொழும்பு) – பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்றுடன்(31) இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகவுள்ளார்.

பின்னர் அவர் ஜூன் 1, 2022 முதல் பாதுகாப்புப் படைகளின் புதிய தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

பதவி விலகும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா படையினர் மத்தியில் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் இருந்தார்.

இதேவேளை, தற்போது இராணுவ பிரதானியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிய இராணுவ தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்

இலங்கையின் 17 வது பிரதமர் மூன்றாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

editor