உள்நாடுகாலநிலை

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

பல பகுதிகளுக்கு இன்று (17) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய வழக்கிலிருந்து பௌசி விடுவிப்பு

மன்னாரில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனம்

இந்தியா-இலங்கை  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து!