உள்நாடு

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 40 வயதான சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பொதிகளில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 245 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்