உள்நாடு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(29) மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் w வரையான வலயங்களிலும், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No photo description available.

Related posts

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க யோசனை – நரேந்திர டி சில்வா.

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

14 ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்

editor