உள்நாடு

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

(UTV|கொழும்பு ) – நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிவெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசேட வர்த்தமானி