சூடான செய்திகள் 1

இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று(30) காலை 7 மணிமுதல் 9 மணிவரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 6 மணிவரையிலும் குறித்த விசேட போக்குவரத்து திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரையில் இந்த விசேட போக்குவரத்து நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் – அஜித் ராஜபக்ச

editor

அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்

ரவி தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 4ஆம் திகதி…