(UTV|COLOMBO)-இன்று சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதால், கொழும்பில் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க முதல் அதிவேக வீதி வரையான பேஸ்லைன் வீதி, பொரள்ளை டி.எஸ் சுற்றுவட்டம், ஹோட்டன் பிரதேசம், தாமரைத் தடாகம், லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக காலி வீதி வரையான பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
![](https://www.utvnews.lk/wp-content/uploads/2024/06/Untitled-1.png)