இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்தத் அகற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேஷியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளாகும.
இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவூதி அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
சிலர் சவூதி அரேபியாவுக்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி, பின்னர் ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக சவூதி அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, இது அதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வணிக அல்லது குடும்ப வருகை விசாக்களில் நுழையும் பலர் அனுமதியின்றி வேலை செய்கிறார்கள், விசா நிபந்தனைகளை மீறுகிறார்கள் மற்றும் தொழிலாளர் சந்தையில் இடையூறுகளை உருவாக்குகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஹஜ் காலத்தில் பயணத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
விசா விண்ணப்பதாரர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு செய்யத் தவறினால் தண்டனை விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது