சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டில் இன்றைய தினம் சீரான வானிலை நிலவுகின்ற போதிலும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான மாநாடு கொழும்பில்

கட்டுநாயக்கவில் அமெரிக்க டொலருடன் இருவர் கைது