உள்நாடு

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ளது.

இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர சட்டம்

குளத்தில் வீழ்ந்த கெப் வாகனம் – மூவரின் சடலங்கள் மீட்பு

ரமழான் பண்டிகைக் காலமானது சகவாழ்வினையும் புரிந்துணர்வினையும் கட்டியெழுப்ப சிறந்த வாய்ப்பு – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor