உள்நாடு

அஹுங்கல்லவில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்

(UTV | பலபிட்டிய) –   அஹுங்கல்ல, போகஹாபிட்டிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொஹகபிட்டிய, உரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே குறித்த இருவரும் மீதும் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் 24 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு 12 போர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு – அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

editor

அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது – நாம் மக்களை ஏமற்றியதில்லை – சஜித் பிரேமதாச

editor

குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில்

editor