உள்நாடு

‘அலிவத்த ஹசித’ கைது

(UTV | கொழும்பு) – பாதாளக்குழு ஒன்றின் உறுப்பினரான ‘அலிவத்த ஹசித’ மட்டக்குளி பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த அவரது வீட்டிலிருந்து கைக்குண்டொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த சந்தேகநபர், கிரான்ட்பாஸ், முகத்துவாரம், மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் – வரிசை யுகம் உருவாகும் – ராஜித சேனாரத்ன

editor

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு