அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அரிசி பிரச்சினையில் இருந்து நாங்கள் வெளியில் வருவோம் – பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரிசி தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு காண்போம். அதன் பின்னர் நாட்டில் அரிசி பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தீர்வுகாண எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது தலைதூக்கி இருக்கும் அரிசி பிரச்சினை இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும். இரண்டு வாரங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தற்போது நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் விவசாயிகள் நெல் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கம் என்றவகையில் நாங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வோம். சிறிய, நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறன. அதனால் அரிசி பிரச்சினையில் இருந்து நாங்கள் வெளியில் வருவோம்.

இந்த நாட்டில் அரிசி மாபியாக்கள் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலேயே செயற்படுவார்கள்.

இந்த காலப்பகுதியிலேயே நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த காலப்பகுதியிலேயே நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்படுகிறது.

அதேபோன்று இந்த காலப்பகுதியலேயே நாட்டில் அரிசி காணாமல் போகிறது. அதனால் எதிர்காலத்தில் இந்த காலப்பகுதில் இவ்வாறான பிரச்சினை இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை.

அதனல் அரசாங்கம் என்றவகையில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் ஒரு கதிர் நெல்லைக்கூட விற்னை செய்யப்போவதில்லை. அந்த நெல்லை மீண்டும் அரிசியக்கி பொது மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வோம்.

தற்போது நாட்டில் ஏற்ட்டிருக்கும் அரிசி பிரச்சினை நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. நாங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் இருந்தது.

என்றாலும் அரசாங்கம் என்வகையில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் இந்த பிரச்சினை இந்த வருட இறுதியில் மீணடும் சந்திக்க ஏற்பட்டால் மாத்திரம் எங்களது பிரச்சினையாக மாறும், அந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்.

அதனால் அரிசி பிரச்சினை நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்தது