உள்நாடு

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்

(UTV | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால், அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களுக்கு  தேவையான மருந்துப்பொருட்களை தபால் சேவை ஊழியர்கள் மூலம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர்  ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை  தனியார் மருந்தகங்களை ஒன்லைன் மூலம் தொடர்புகொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!

ICST பல்கலைக்கழகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட 77 வது சுதந்திர தின நிகழ்வு

editor