உள்நாடு

அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடுகள் கையளிப்பு!

(UTV | கொழும்பு) –

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாவடிப்பள்ளி மேற்கு பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250,000 பெறுமதியான அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு திறந்து வைத்து பயனாளியிடத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் கலந்து கொண்டதுடன், மேலும் விசேட அதிதியாக காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் அவர்களும் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாவடிப்பள்ளி பள்ளிவாசல் தலைவர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

   

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]