உள்நாடு

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், இஷாக் ரஹ்மான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகி இன்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

பைசல் காசிம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி இஷாக் ரஹ்மான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது, ​​மூவரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின் தடைக்கு காரணம் முந்தைய அரசாங்கங்களே – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor

மற்றுமொரு அரச தொலைகாட்சி – வானொலி சேவைகள் முடக்கம்

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!