அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05) தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் மாதாந்த வாடகை 5 மில்லியன் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பல அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் வாடகைக்கே உள்ளன. இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் மாத வாடகை 5 மில்லியன்.

வர்த்தக அமைச்சகத்தின் மாத வாடகை 65 லட்சம். அவற்றை அரசு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசின் நடவடிக்கை என்ன ? சாணக்கியன் கேள்வி

editor

தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

editor