வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…

(UTV|AMERICA) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, லீ கவுண்டியின் பீராகார்டு நகரில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லீ கவுண்டியில் சுமார் 5000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சூறாவளி காரணமாக 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

2019 අවසාන අර්ධ චන්ද්‍රග්‍රහණය අදයි

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று

நியுசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோகம்; துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு!