உள்நாடு

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களின் வாயடைக்க முடியாது

மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

சவூதி பேரீச்சம்பழங்கள் இம்முறையே நியாயமாகப் பகிரப்பட்டது – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

editor