உள்நாடு

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில அலுவலக ரயில் சேவைகளும் மற்றும் அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 80 க்கும் அதிகமான அலுவலக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளது.

ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான தொற்றாளர்கள் விபரம்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை