சூடான செய்திகள் 1

அநுராதபுரத்தில் 11 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) பொசன் பூரணையை முன்னிட்டு நாளை மறுதினம் (13) முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரக்காலம் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரசேதசங்களில் உள்ள 11 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பொசன் பூரணை காலத்தில் விசேட கடமைகளுக்காக பிற மாகாணங்களில் இருந்து வரும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதியை வழங்குவதற்காக குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு