அரசியல்உள்நாடு

அநுரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர குமார இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

இலங்கையின் பொருளாதாரம் 5.3%மும், கைத்தொழில் துறை 11.8%மும் வளர்ச்சி பெற்றுள்ளது!