சூடான செய்திகள் 1

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) இலங்கை வடக்கு கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியிில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு(25) மற்றும் இன்று(26) அதிகாலை அனலைத் தீவிற்கு வடமேல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவர்களின் 3 ட்ரோலர் மீன்ப்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் , மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

காற்றின் வேகம் அதிகரித்து வீச கூடும்

முன்னாள் சுங்கப் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு