உள்நாடு

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க அரசிடம் நிதி இல்லை

(UTV | கொழும்பு) – அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அகற்ற வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்ட போதிலும் தற்போதைய நிதி நிலைமையின் அடிப்படையில் குறித்த மாற்றங்களைச் செய்வதற்கான நிதி இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக பிரதமர் தலைமையில் துணைக்குழு ஒன்றை அமைக்க நேற்றைய (26) அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

சிறுத்தையின் இறப்பில் சந்தேகம் :விசாரணைக்கு குழு

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு ரூ.5,000 இடைக்கால கொடுப்பனவு