சூடான செய்திகள் 1

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO) கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கோனகங்ஆர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

எதிர்க்கட்சித் தலைவரிடம் கடிதத்தை கையளித்த ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது